Friday, July 25, 2008

என் கவிதேவதையே...!

என்னை எழுத
வைத்தவள்
நீ என்றாலும்
நான்
கவிஞனானது
உன் பேர்
சொல்லிப்பார்த்துதான்

உன்னைப் பற்றி
எழுத
நினைத்தபோதெல்லாம்
எழுதிக்
கொண்டேயிருந்தேன்
உன்னை விட
அதிகம்
எழுத நினைத்தேன்
எழுதுவதையே
மறந்துவிட்டேன்

Thursday, July 24, 2008

அருமையானவளே...!

நீ
எங்கெல்லாம்
என்னைத் தேடுகிறாய்
என்பதை
ரசிப்பதற்காகவே
நான் தொலைந்து
போகலாம்

நீ
வந்தவுடன்
கை கொடுப்பதா
கன்னம் கொடுப்பதா
என்ற குழப்பத்தை
சாதுரியமாய்
தீர்த்து வைத்தாய்
கைகூப்பி
வணக்கம் சொல்லி.....

காணும்போதே.....கரைந்தாயே!

Wednesday, July 23, 2008

உன் வாசகன் நான்...!

எத்தனையோ பேர்
படித்து
எதுவும் கூறாமல்
போன என்
கிறுக்கல்களைத்
தேடி நீ கவிதையாக
வாழ்த்தியதில்தான்

கிறுக்கன் நான்
உன் கவிவாசகன்
ஆனேன்.

Sunday, July 13, 2008

அன்பே...!

உன்னைத் தேடி கிறுக்கிய
கிறுக்கல்கள் எல்லாம் உன்னைக்
காட்டிக் கொடுத்துவிட்டு
தலைமறைவாகிவிட்டன


அவைகளை நீ படித்தால்
எழுதிய என்னை உனக்கு
பிடிக்காமல் போய்விடுமோ
என்ற பயத்தில்..

Monday, July 7, 2008

முதல் நாள்

இதயம் சேகரித்துக்
கொண்டிருந்த
வானத்தில்
நீ
பறக்கத் துடிக்கையில் அசைந்த
புற்களின்
நடுவேதான்
அமர்ந்திருந்தது
நம் நட்பின்
முதல்
நாள்

-அறிவுமதி